search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்டக்டர் கைது"

    மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 13½ லட்சம் மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 41). அரசு பஸ் டிரைவராக உள்ள இவர் அண்ணாநகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கரிசல்குளம் திருமால்நகரை சேர்ந்த கணபதி (48) என்பவர் அரசு கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் உறவினர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதை நம்பி கணபதியிடம் ரூ. 13½ லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது கணபதி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். #tamilnews
    கிருஷ்ணகிரியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.

    ×